பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

33


ஆ = என்றால் ஆன்மா என்றும்; நந்தம் என்றால் குறையாத என்றும் பொருள் உண்டு.

ஆன்மாவுக்குக் குறைவில்லா நிலையைத் தான் ஆனந்தம் என்றனர்.

இது குடும்பவாசிகளுக்குக் கிட்டாத ஒன்று என்றும், துறவறம் பூண்டவர்களுக்கே தொடர்ந்து கிடைக்கும் என்றும் ஓர் ஐதீகம் உண்டு.

அதனால்தான், துறவறம் பூண்ட தூயவர்கள். தங்களை ஆனந்தம் பெறப்பெற்ற ஜீவிகள் என்று கூறி ஆனந்தர் என்று அழைத்துக் கொண்டனர்.

விவேகாநந்தர் இந்தப் பெயருக்குப் பெருமை சேர்த்தவர்.

இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தா, இந்தப் பெயருக்குக் களங்கம் கற்பித்த கொடுமைக்காரர்.

இந்த மூன்று இனிய நிலைகளாகிய சந்தோஷம் மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகியவற்றை முகம்தான் உலகுக்குக் காட்டுவதால்தான் முகம் உடல் உறுப்புக்களிலேயே முதன் மை ஸ்தானம் பெற்று முக்கியத்துவம் அடைந்திருக்கிறது.

இதுவரை அகம், முகம் என்கிற சுகம் தரும் உறுப்புக்களின் தன்மைகளை அறிந்து கொண்டோம். இனி முகத்தின் அமைப்பைப் பற்றிய சிறப்புத் தன்மையை தெரிந்து கொள்வோம்.