இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8 துன்பத்திலும் சுவைகண்ட தென்றல் உள்ளம், தாய்
நாட்டு நிலை நினைத்தால் புயலாகி விடுகிறது.
“ நல்லதமிழ் நாட்டெழுந்த இந்திப் போரில்
தேட்டாளர் முகங்களிலே அறுத்தெறிந்த திருத்தாலிக் கயிற்றில் நான் எழிலைக் கண்டேன்”
ஆம்; அது கணவனை இழந்த காரிகை கண்ணகிக்குச் சிலை
எடுக்க நினைத்த சேரன் செங்குட்டுவனின் எழில் அவன்
புலியெனக் கிளம்பிப் போர் தொடங்கிப் புல்லர்களிப் புறங்காட்டவைத்த எழில் ,வீர எழில்!
வானத்து முழுமதியாள் வார்க்கின்ற நில வொளியை, வையகத்துப் பொற் கொடியார் முக மலர்க்குப் பிறரெல் லாம் ஒப்பிட்டார். கவிஞர் முடியரசன் காண்பதோ,
“பொதுவுடைமை ஆட்சியினை இரவுப் போதில்
புரிகின்றமுழுமதியே......
என்பது கவிஞருக்குப் பொதுவுடைமை ஆட்சியிலே உள்ள
விருப்பத்தை அன்று நாம் சுட்டிக் காட்ட விரும்புவது கருத்திலே உள்ள புதுமையை!
முடியரசனின் ‘ஆறு’ மிகச் சிறந்த இலக்கியப்
படைப்பு. தனிக் கவிதைகளிலே இரண்டாயிரம் ஆண்டு
களாக உயிர் பெற்று வாழும் சங்க இலக்கியம் போல் அது
திகழ்கிறது.
- ஆறு ஓடுகிறது, வேகமாக ஓடுகிறது. சிலம்பு தந்த
இளங்கோவடிகள் காவிரியின் சிலம்பொலியைச் சித்திரித் துக் காட்டியுள்ளார். முடியரசனும் ஆற்றைப் பெண்
ளுக்கி, அழகானதோர் கற்பனை செய்கிருர். அவளின் ஒட்
டத்தைக் கண்டு கற்பனையாகச் சொல்கிருர் ஆசிரியர்,