பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 “.......... m i = + = + = + தன்பால் செந்தா மரையின்றி முகங்காட்ட முடியா ஆறு மாள்வதற்குக் கடல்நோக்கி ஓடு தல்பார்

என்று. ஒடும் ரிேலே தாமரை பூக்காது என்ற உண் மையை எவ்வளவு அழகான கற்பனையின் கருவாக்கிக் கொண்டார் ஆசிரியர்! கம்பனையும், பாரதியையும், பாரதி தாசனேயும் வைத்துக் கொண்டு, பார்த்துப் பார்த்துக் கவிதை பாடி, அவர்களின் கருத்தையும் வரிகளையும் சேர்த் துச் சேர்த்துச் செய்யுள் எழுதும் சில கரும வீரர்களும் இந்த ஆற்றைப் போல் முகங்காட்ட முடியாமல் ஒடு வதைத் தான் நாம் காண்கிருேம்! 'கால்முளைத்த தாமரையின் மொக்குள் போலக் காட்சிதரும் குஞ்சுகள்’ கோழிக்குஞ்சுகளின் உருவத்திலே மட்டுமன்று, கவிதை யிலும் தெளிவு, உவமையிலும் புதுமை! ஆம், ஒவ்வொன் றும் ஒப்பற்ற கவிதை. ‘இயற்கைத் தாய் அற்புதமான படைப்பு: யாரும் கற்பனை செய்யாத கவிதை. வாழும் நாட்டிலே பிறந்த கவிஞன், நாட்டின் வளத் தையும் நலத்தையும் பாடுவான். சங்க இலக்கியம் அதற்குச் சான்று. அல்லற்பட்டு அவதியுறும் காட்டிலே வாழும் கவிஞன் ஆனந்தப்பண்பாட மாட்டான். குமுறும் நெஞ்சம் எரிமலையாக, கொதிக்கும் குருதி கொடுவாளாக, பெருமை குறைவது கண்டு பெருமூச்சுவிட்டுக் கருத்தற்ற மக்களைக் கண்டு கண்ணிர்விட்டுப் பாடுவான். அவன் குரலிலே சோகம் இருக்கும்; கவிதையிலே கனலிருக்கும்; கருத்திலே