பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளம் விழைந்த ஒருவரை விட்டுவிட்டுக்
கள்ளச் செயல்புரியக் கற்பறியா நல்லகுலப்

பெண்ணென்றா எண்ணினைநீ பேதைமையால் கூறுகிறாய்
கண்ணின் இமைபோலக் காப்பவளே! என்னுளத்தைத்

தொட்டார்க் குரியளாய்த் தோள்தோய்ந்து வாழலன் றிக்
கட்டாயக் கல்யாணங் கண்டிப்பாய் நான்வேண்டேன்

அஞ்சிஅஞ்சி வாழ்ந்த அரிவையர்கள் இந்நாளில்
மிஞ்சிவிட்ட செய்கையினை மேல்நடத்திக் காட்டுகிறேன்

என்றுரைத்துச் சின்னாளில் ஏறனைய காதலனை
மன்றலன்று கொண்டாள் மகிழ்ந்து






72