இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
{{center| எந்நாளோ?
எண்சீர் விருத்தம் மனையானை இல்லிருத்தி மாலை ஒர்நாள்
- மனஅமைதி பெறஎண்ணிச் சென்றேன்; நல்ல
"சினிமா'என் றுரைத்தார்கள்; அதனல் நானும்
- சிறிதெண்ணி உட்புகுந்தேன்; தொடங்கி னர்கள்
மனநிலையை முகக்குறிப்பால் உணர்த்தும் அந்த
- மங்கையைப்போல் நடிப்புலகில் கண்ட தில்லை!
அனநடையும் அவள்குரலும் படப்பி டிப்பும் அத்தனையும் புகழ்ந்தார்கள் ஆங்கி ருந்தோர் 2 கலையுண்டு நடிப்புண்டு நடன முண்டு
- கண்கவரும் அழகுண்டு; நெஞ்சை அள்ளும்
நிலையில்லை பேச்சொன்றும் புரிய வில்லை
நினைப்பெல்லாம் எங்கெங்கோ சென்ற தங்குச் சிலைஎன்ன இருந்தஎனை மணியின் ஒசை செவிபுகுந்து கிளப்பிற்று வீடு சென்றேன்; "தலைவலி'என் றுரைத்தேன்நான்; என்னே விட்டுத் தனியாக சென்றீரே வேண்டும் என்றாள்