பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{center| எந்நாளோ?

           எண்சீர் விருத்தம்                                       
மனையானை இல்லிருத்தி மாலை ஒர்நாள்
மனஅமைதி பெறஎண்ணிச் சென்றேன்; நல்ல
"சினிமா'என் றுரைத்தார்கள்; அதனல் நானும்
சிறிதெண்ணி உட்புகுந்தேன்; தொடங்கி னர்கள்

மனநிலையை முகக்குறிப்பால் உணர்த்தும் அந்த

மங்கையைப்போல் நடிப்புலகில் கண்ட தில்லை!

அனநடையும் அவள்குரலும் படப்பி டிப்பும் அத்தனையும் புகழ்ந்தார்கள் ஆங்கி ருந்தோர் 2 கலையுண்டு நடிப்புண்டு நடன முண்டு

கண்கவரும் அழகுண்டு; நெஞ்சை அள்ளும்

நிலையில்லை பேச்சொன்றும் புரிய வில்லை

   நினைப்பெல்லாம் எங்கெங்கோ சென்ற தங்குச்                                சிலைஎன்ன இருந்தஎனை மணியின் ஒசை
   செவிபுகுந்து கிளப்பிற்று வீடு சென்றேன்;                           "தலைவலி'என் றுரைத்தேன்நான்; என்னே விட்டுத்
   தனியாக  சென்றீரே வேண்டும் என்றாள்