பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழந்த காதல் எண்சீர் விருத்தம் புகழணங்கு 1 சிந்தனையாம் சோலேகனில் தனித்தி ருந்தேன் சிவந்தமுகப் பெண்ணுெருத்தி அழுது கின்ருள்; நொந்திருப்ப தெதனுலோ? கின்பேர் யாதோ ? துவலுதியோ? எனப்பரிந்து வினவி னேன்யான்; "இந்தவுல கெனக்கிழைக்கும் தீங்கி னைத்தான் என்னென்பேன் 1 மெய்க்காதல் தீய்ப்ப தற்குப் புந்தியிலாச் செயல்செய்து மகிழ்ந்த தந்தோ! புழுங்குகிறேன் என்காதல் இழந்த தாலே 2 என்பெயரைப் புகழென்று புவியோர் சொல்வர், எங்காளும் பொதுத்தொண்டு புரிந்து வந்த அன்பனேகான் காதலித்தேன்; பழிஎன் பா8ள அவனுக்கே உலகத்தார் மணமு டித்தார்; தன்னலமே விழையுமொரு செல்வன் என்னைத் தனக்குரிமைப் பொருளாக்கப் பணத்தை விசி என்னலத்தை நுகர்வதற்கே சுற்று கின்ருன் இவ்வுலகும் சரிஎன்ருல் யாது செய்வேன்' 9?