பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 ஆடையிலே அழுக்ககற்றித் துாய்மை ஆக்கி அழகுசெய்து தருகின்ருேன், பொலிவு குன்றத் தாடையிலே வளருமதை வழித்தெ றிந்து தளிர்க்கின்ற முடிவெட்டி அழகு செய்வோன், கோடையிலே வருந்தாமல் முள்ளால் கல்லால் கொடுமையொன்றும் நேராமல் நடப்ப தற்குச் சோடையின்றிச் செருப்பளிப்போன் இவர்க ளெல்லாம் தொடக்கூடாச் சாதிஎன்ருல் தொலைக வையம்! 4 வளமிக்க நாடென்பர் இந்த நாட்டில் வாழஒரு வழியின்றி வறுமை தன்னல் உளம்நொந்து கூலிகளாய்ச் செல்லு கின்ருர் ஒப்பற்ற என்னினத்தார்; வேற்று நாட்டார் கிழங்கென்றும் கீரை என்றும் எண்ணி நம்மைக் கீழாக்கி விட்டஇந்த கிலேயொ ழிக்கக் களங்கான வேண்டாவோ வீரம் மிக்க காளே களே ஏனின்னும் பாழு றக்கம்? ఎ• 104 *