பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 அனிச்சத்தின் மலர்மோப்பக் குழையும் என்பர் அன்பன்முகம், உளம்திரிந்து நினைத்தால் வாடும் மனத்திருக்கும் உண்மையினை நின்பால் சொன்னேன் மாதரசே! அடைக்கம்மை கல்லாய்! என்றன் இனித்திருக்கும் நண்பன்முகம் சுருங்கா வண்ணம் இல்லறத்தைப் பேணிடுக இனிய பேசி மனக்கினிய செய்திடுக குறிப் பறிந்து மனைவிளக்காய் அவன் மகிழ வாழ்க வாழ்க 4 ஒருவர்பிழை பொறுத்திடுதல் இருவர் கட்பாம் உயர்நூல்கள் பயின்ருலும் வாழ்க்கை ஏட்டில் ஒருவருளம் பிறர்பயில வேண்டும்; வேண்டின் - உண்மைநிலை இன்பநிலை காணல் வாய்க்கும்; பெருகிடுநல் வாழ்வுக்கு மனேவி மக்கள் பேரணியாம் மங்கலமாம் என்பர் ஆன்ருேர் : அருகிருந்து திறந்துள்ளம் அளவ ளாவும் அன்புளத்தன் உயிர்கண்பன் ஒளிவி ளக்காம் 5 உளமொத்த இரட்டையராய் உடன்பி றப்பாய் உணர்வொன்ருய்ப் பழகிவரும் நண்பன் தன்னே உளமொத்த துணையாகக் கொள்க என்றே உன்கையில் அடைக்கலமாத் தந்தேன். எங்கள் உளமொத்த வாழ்வேபோல் வாழ்க அன்பை I உயிரென்று போற்றிடுக; இன்பம் பொங்க வளமிக்க தமிழ்பாடும் என்றன் நாவால் வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வாழ்த்துகின்றேன் 159