பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* - வாயுறை வாழ்த்து எண்சீர் விருத்தம் 1 திருத்தக்கன் தருசிங்தா மணியில் இன்பத் தேனுண்டு சங்கத்து நூல்தி ளேத்துச் சிரித்துவரும் தமிழண்ணல் நாச்சி யப்பத் திருவாளர் தருசிந்தா மணியை இல்லின் பொறுப்பேற்கும் காதலியாய்ப் பெறுதல் கண்டு பூரிப்புக் கொள்கின்றேன்; உங்கள் வாழ்வு கருத்துவளர் காவியமும் புலவ னும்மாம், கவிநயமாம் பெறுமக்கள் என்ன வாழ்க 2 தான் சமைத்த சுவையுணவை இனிதென் றுண்ணும் தலைவனைக்கண் டுளமகிழ்ந்தாள் தலைவி என்று நான்சுவைத்த குறுந்தொகைப்பாட் டுரைக்கும் அந்த நலமேபோல் சுவைவாழ்வு வாழ்க தோழி ! தேன் பழுத்த தமிழ்மொழிக்கே ஆக்கங் தேடும் தெளிவுரைகள் ஆய்வுரைகள் எழுத வல்லான் மேன்மக்கள் குழுவில் இவன் அறிஞன் என்ன மிளிர்வதுகின் கையில்தான் உணர்தல் வேண்டும் 158