பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகவு கண்டு தாய்மைப் பண்பை மேலும் வியந்தேன், சின்னுட் சென்றன குஞ்சுகள் பெரிய கோழிகள் ஆயின; குப்பையை அன்னைக் கோழி கிளற - இரைபெறும் நோக்கால் இளைய கோழிகள் ஒடி வந்தன. உடனே இரைதனேக் கொடுக்க மறுத்துக் கொத்தி விரட்டிய(து) ஒற்றுமை காணேன், உயர்ந்த அன்பைக் காணேன், பகைமை கண்டேன் அந்தப் பேதைக் கோழியின் பிழையினைக் கண்டதும் உலகில் நடக்கும் ஒன்றனே யுணர்ந்தேன்; ஈயும் எறும்பும் இருந்திடப் பொருஅள் கன்மகன் நோயுறின் தான்மருங் துண்பாள். அன்பின் உச்சியில் அமர்ந்திருப்பாள்.தாய் பெரியோன் ஆன பின்னர்த் திருமணம் நடத்தி மகிழ்வாள் நாட்கள் சென்ருல் அன்பை மறப்பாள் அருமை மகனென. எண்ணவும் செய்யாள் எழுப்புவள் பகையை பூனேயும் எலியும் போல நடப்பாள் o என்னே உலகம்! என்னே தாய்மை! தாயும் கோழியும் தம்முள், ஒன்றென . வாழ்தல் நன்ருே? வாழின் இழிவே, 30 25