இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அன்னையே உன்போல் மாதர்
ஆயிரம் ஆயி ரம்பேர்
பின்னரும் உள்ளார் என்று
பேசிட வாழ்த்துக் கூறி,
இன்னலும் சிறையும் எங்கட்
கினிமையாய்த் தோன்ற நெஞ்சில்
மன்னுக நீயே உன்றன்
மலரடி வாழ்த்து கின்றோம்
❖