பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அன்னையே உன்போல் மாதர்
    ஆயிரம் ஆயி ரம்பேர்
 பின்னரும் உள்ளார் என்று
     பேசிட வாழ்த்துக் கூறி,
இன்னலும் சிறையும் எங்கட்
     கினிமையாய்த் தோன்ற நெஞ்சில்
 மன்னுக நீயே உன்றன்
     மலரடி வாழ்த்து கின்றோம்