பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் சிலை நிலைமண்டில ஆசிரியப்பா திண்மலைச் சாரல் சார்தரும் சிற்றுார் கண்கவர் பொழில்சூழ் கருமலேக் குறிச்சி எனும்பெயர் கொண்டெழில் இலங்கிய தவ்வுழி இனமயில் அகவ இருந்ததோர் குன்றம் : கலைஞன் கோட்டம் - Fr"" 5 குன்றின் அடியில் சிற்பக் கோட்டம் ஒன்றினை நிறுவி உலகோர் வியக்க வாழ்ந்தனன் சிற்பம் வல்லான் ஒருவன் ; போழ்ந்தகற் பாறையிற் புகுத்திய புதுமை கண்டார் அவனைக் கடவுளே என்பர் கற்பனைத் திறனும் கைச்சிற் றுளியும் 1() பொற்புடன் படைத்த அற்புதப் பொருளெலாம் தொடாஅது நின்று தொலைவில் காண்போர் விடாஅது நோக்கி வியப்புற் றவையெலாம் உயிர்ப்பொரு ளென்றே உரைப்பர் அவர்தாம் அயிர்ப்பொரு சிறிதும் அடையார் : அருகில் 15 தொட்டுப் பயின்றபின் துணிகுவர் சிலையென : எட்டுத் திசையும் நிகரிலே என மனம் விட்டுப் புகழ்வர் ; விளைபுகழ் மொழிகள்