பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 கடற்கணவன் எங்குள்ளான் என்று தேடிக்

    கதறிக்கொண் டோடுகின்ற ஆற்றுப் பெண்ணுள்           தொடக்கண்டு பெருங்கடலோன் அலைக்கை நீட்டித்
    தோள்தொட்டான், மகிழ்வுற்றுள், பிரிவுத் துன்பம்     விடக்கண்டாள். ஒன்றுகக் கலந்து விட்டாள்;
    வேறிடத்தே பிறந்துளநி அறியா என்பால்             கடைக்கணித்துக் கலந்து விட்டாய்! ஆறும் எங்கோ
    உருவெடுத்தும் கடலோடு மணத்தல் காண்பாய்!
                         13

முப்பதுநாள் தமிழ்சொல்லிப் பள்ளிக் கூட

   முதல்வர் தரும் ஊதியத்தைக் கடனுக் கெல்லாம்          

ஒப்படைத்துப் பதினைந்து நாட்கள் ஓட்டி

   ஒழிந்தசின்னுள் என்செய்வேன் என்ற எண்ணம்                கப்பிடநி அருள்சுரந்துன் அன்னை தந்த
   காப்பளித்துக் காப்பளித்தாய் ! அதுபோல் வானம்             தப்பியதால் பெருக்கற்றும் ஊற்று நீரால்
   தரணியினைக் காக்கின்ற ஆறு காண்க !
                         14

மலைமீது தோன்றிப்பின் அருவி யாக

   மன்னர்பகைப் போர்முரசம் என்ன ஆர்த்து                

நிலையாமல் ஒடிப்போய்க் கரையே யில்லா

   நீர்க்கடலில் மறைகின்ற ஆறு கண்டேன்;

உலையாத உண்மைகண்டேன்; உலகில் தோன்றி

   உருப்பெற்ற பொருள்ஒருநாள் மறைதல் உண்மை        

கலைமானே! மறைவதன்முன் மக்கள் வாழ்வைக்

   காண்கின்ற ஆற்றைப்போல் கடமை செய்க!
                        43