இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயற்கையின் எழுச்சி
நேரிசை ஆசிரியப்பா
இயற்கை யரசி உலாவர எண்ணி
எழுந்தனள் போலும் எனக்கரு தியதால்
விளக்குக் கம்பம் வீதியில் நின்ற
தந்திக் கம்பம் தலைவணங் கினவே ;
இவற்றின் கம்பியால் எடுத்தன தோரணம் ; 5
வீடுகள் தாமும் வீழ்ந்து வணங்கின ;
உயர்பெரு மரங்கள் உச்சியை மட்டும்
அசைத்து நின்றன. ஆர்ப்பொலி கேட்டு
நின்ற நிலையில் நெடுக வீழ்ந்தன ;
புள்ளினம் தம்வாய் புதைத்து நின்றன; 10
ஒடுகள் மலரென உதிர்ந்தன எங்கும்;
குடிசைக ளிவற்றைக் கோமகள் காணல்
வேண்டா என்று விரும்பிய வான்மரம்
அடிவயிற் றகத்தில் அடக்கிக் கொண்டன ;
சிற்சில குடிசைகள் சிதறி வானில் 15
வாண வேடிக்கை விளைத்தன; மக்கள்
அங்கு மிங்கும் அலைந்து திரிந்தனர் ;
கதிரவன் மதியன் கரந்து நோக்கினர் ;