பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

புள்ளிமயில்! உன்னைக்கண் டாலறிவுப்
புலவனுக்குத் தோகை காட்டி
உள்ளமதில் கற்பனைகள் சேர்க்கின்றாய்!
ஓவியன்வைத் தெழுது கோலைத்
துள்ளிவிளை யாடச்செய் கின்றாய்நீ!
துடுக்குள்ள பெண்ணை நோக்கி
எள்ளிநகை செய்வதற்கோ நிமிர்கின்றாய் ?
எழில்மயிலே! மீண்டும் ஆடு!