பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலே

அறுசீர் விருத்தம்

1

விண்ணுக்குப் பொலிவூட்டும் பன்னிறங்கள்
விளையாடும் தோகைக் கண்ணின்
 எண்ணிக்கை எத்தனைபார்! அழகைத்தான்
என்னென்பேன்! ஒலிக்கும் மேகப்
பண்ணுக்குத் தவருமல் அடிவைத்துப்
பரதத்தைச் செய்வாய் ! என்றன்
கண்ணுக்கும் புண்பட்ட கருத்துக்கும்
களிப்பூட்டும் மயிலே வாழ்க!

2


மங்கையர்க்கு கின்சாயல் உண்டென்ன
மனமெனக்கோ ஒப்ப வில்லை;
 இங்கிருக்கும் சாதியைப்போல் எண்ணற்ற
கண்ணுள்ள நீளத் தோகை
 இங்கிதமாய் விரித்துங்டஞ் செய்யுங்கால்
எழுப்புகிற குரலின் ஒசை
நங்கையரின் இன்குரலுக் கொப்பில்லை
நகைக்கின்றர் அதனைக் கேட்டு

50