பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

கடலுக்குள் வலைவீசி மீன்பிடிக்கக்

காதலனே வழிய னுப்பிக்

குடிலுக்குள் அவன்வரவை எதிர்நோக்கிக்

கொண்டிருக்கும் மங்கை யுள்ளம்

துடிதுடித்துக் குமுறுவதைப் போல்நீயும்

துடிக்கின்றாய்! குமுறு கின்றாய்!

கடனுக்கோ ? அன்றியவள் துன்பத்தைக்

கண்டோ ?நீ உண்மை சொல்வாய்

13

நீலமணிக் கடற்கப்பால் கீழ்வானில்

நெடுங்கதிரோன் செங்நி றத்தைக்

கோலமுடன் பூசுவதைக் கண்டேன்நான்

குதித்தெழுந்து கடவுள் என்றேன்;

ஞாலமுளார் நாத்திகமாம் என்கின்றார்

நானதற்குச் செய்வ தென்ன

வேலையிலார் சொல்லுக்குச் செவிசாய்த்தா

வேலைகளைச் செய்கின் றாய்நீ ?


49