இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12
கடலுக்குள் வலைவீசி மீன்பிடிக்கக்
- காதலனே வழிய னுப்பிக்
குடிலுக்குள் அவன்வரவை எதிர்நோக்கிக்
- கொண்டிருக்கும் மங்கை யுள்ளம்
துடிதுடித்துக் குமுறுவதைப் போல்நீயும்
- துடிக்கின்றாய்! குமுறு கின்றாய்!
கடனுக்கோ ? அன்றியவள் துன்பத்தைக்
- கண்டோ ?நீ உண்மை சொல்வாய்
13
நீலமணிக் கடற்கப்பால் கீழ்வானில்
- நெடுங்கதிரோன் செங்நி றத்தைக்
கோலமுடன் பூசுவதைக் கண்டேன்நான்
- குதித்தெழுந்து கடவுள் என்றேன்;
ஞாலமுளார் நாத்திகமாம் என்கின்றார்
- நானதற்குச் செய்வ தென்ன
வேலையிலார் சொல்லுக்குச் செவிசாய்த்தா
- வேலைகளைச் செய்கின் றாய்நீ ?
❖
49