பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

* - முகிலிடை நிலா

பாம்பொன்று நினைவிழுங்கும் என்று சில்லோர்

பகர்ந்திடுவார் அதைநம்பார் அறிவில் நல்லோர் வேம்பன்னுர் எமைவீழ்த்த இனைய சூழ்ச்சி விளைத்தார்கள் தொலைத்தார்கள் தமிழர் ஆட்சி ; கூம்புவதேன் தாமரைகள் உன்னைக் கண்டு குடைந்துதேன் அருந்தமலர் சென்ற வண்டு தேம்புவதைக் காணுயோ சிறையிற் பட்டு? சென்றிடுவாய் வெளியில்விடச் சொல்லி விட்டு

             2

ஆரியத்தால் ஒளியிழந்த தமிழர் போல அழகிழந்தாய் உனேயடைந்த மேகத் தாலே நாரியரின் முகங்கண்டு நாணி உள்ளே நண்ணினைநீ எனஎண்ணி நகைத்தாள் முல்லை வேறினத்தார் நாடாள வீணன் அல்லேன் வேலெடுத்துப் போர்தொடுப்பேன் வெற்றிகொள் சீரழிப்பேன் எனக்கிளம்பும் வீரன் போலச் (வேன் சிரித்தெழுந்தாய் மேகத்தைப் பிளந்து மேலே

           58