பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

உடைத்தோ இவ்வெழிற் குவமை? இதனைப் 70
படைத்தோன் வாழி! படைத்தோன் வாழி!
என்றேன்; நண்பன் “இறைவனோ" என்றனன்;
அன்றே என்றேன்; “அரசனோ" என்றான்;
அறியா துரைத்தனை ஆருயிர் நண்பா!
உறுதி குலையா உழைப்பினை நல்கிக்75
குருதியை நீராய்க் கொட்டிய ஏழை
பாரில்இப் பூங்கா படைத்துத் தந்தனன்
ஆரிதை உணர்வார்? அவனை வாழ்த்தினேன்
இதன்நலம் அறியான் பிறர்நலம் பேணுவான்
இதமுடன் உழைக்குமவ் வேழையை வாழ்த்தினேன்80
வாழிய அவன்குலம் வாழிய நன்றே!