பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



புதருள் கனி

1

உருத்தெழுந்த மார்பகத்தாள்
வில்லொடித்த புருவத்தாள்
உள்ளத்தே தைத்தோடிப்
பாய்கின்ற வேல்விழியாள்
கருத்தெழுந்த மேகத்தைப்
புறங்கண்ட சுரிகுழலாள்
கன்னத்தில் அழகொளியாள்
அன்னத்தின் எழில்நடையாள்
சிரித்தெழுந்த செவ்விதழாள்
இன்மொழியாள் அழகெல்லாம்
 சேர்த்தெழுந்த உடலுடையாள்
அவளைக்கண் டென்மனத்தை
 மறுத்தெழுந்த ஆர்வத்தால்
யாரென்றேன் விதவைஎன்றுள்
மனமுடைந்தேன் மதியிந்தேன்
உன்மத்த நிலையடைந்தேன்

2


அச்சச்சோ! அவள் நுகர
முடியாத மலராணுள் !
அகங்கவரும் எழில்கொண்ட
சிலையானுள்! கோழைமன

64