இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அச்சத்தார் முட்புதராய்
- அதனடுவே கனியானுள் !
ஆவலெலாம் பாழன்றே !
- இளம்பருவ எழில்நிறைந்த
பச்சைமயில் இவளன்றே !
- பாவையிவள் நாள்முழுதும்
பதியின்றித் துயருறவோ !
- அறமிதுவோ! விதவைஎனும்
கொச்சைமொழி இல்லாமல்
- செய்திடுவேன் என்றுறுதி
கொண்டுன் றன் விருப்பம்யா
- தெனவினவக் கோதையவள்
3
சிந்துகின்ற நீர்துடைத்து
- "விருப்பந்தான் ஆனுலும்
சீறிடுவர் உறவினர்தாம்
- சாதியினில் ஒதுக்கிடுவர்
நிந்தனைகள் பேசிடுவர்
- நேர்கிற்க ஆற்றலிலேன்
நீறுகிப் போகாதோ
- நேர்மையற்ற சட்டமெலாம்
நொந்துழலும் என் ரிலையை
- அறியாது பெற்ருேரும்
நோயென்று செப்புகின்ருர்
- செய்வதெதும் நானறியேன்
இந்தகிலை உள்ளளவும்
- எப்படிநான் ஒப்பிடுவேன்”
என்றுருகிச் சொல்லிவிட்டு
- முகமாறிப் போய்விட்டாள்.
65