பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3



அகத்தியின் குவிபூத் தோற்றம்
அன்னதோர் பிறைநி லாவே!
பகற்பொழு தகலும் நேரம்
பார்த்ததும் வருவேன் என்றாள்
இகழ்ச்சியோ செய்கின் றாள்என்
றேங்கிடும் உள்ளம் ஆங்கே
பகர்ந்ததை மறந்தோ போனாள்?
பாவைஏன் வரவே இல்லே?