பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறுமோர் நாளென மனத்திலும் கினையாள் ஆயினும் அந்தோ அரசன் பிழையால் ஆயினன் பிணமென அறைந்தனர் அறிந்தோர்; தீதிலாக் கோவலன் தீர்ந்தன ன் என்ற திமொழி கேட்டுத் திகைத்தனள், பதைத்தனள், போம்வழி யாதெனப் புலம்பினள், அன்புடைக் கொழுநன் மாண்டான் குவலய வாழ்வு தழுவுதல் வேண்டாள், தன்பொருள் யாவும் அறத்திற் காக்கி அறவணர்ச் சார்ந்து புறச்செல வொழிந்து புகுந்தனள் பள்ளி, இன்பங் துறந்தாள், இசை,நடந் துறந்தாள், என்பும் அன்பால் இளகிடப் பெற்ருள், அதனுடன் அமையா தருண்மணி மேகலை பித்துல கறுத்துப் பெருகிலே பெறவே துறவு பூணத் தூய்மை யாக்கினள், மறமனத் தாயின் மாற்றம் வெறுத்தாள் இனேயள் அன்னே என்னுயிர் மாதவி அனேயள் பிறந்த அருமை நாட்டில் மானமே மதிக்கும் மாந்தர் வாழ்ந்தனர் இங்கோ வந்தவர் இசைத்தனர் கற்பை ? ஆரிய இலக்கியம் அரிவையர் பண்பைச் சீரிய முறையிற் செப்பிய துண்டோ ? இழிவாம் இழிவாம் ” என்றவர் மறைந்தார் கன்றவர் மொழியே வாழிய கற்பே.

14