பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் குரல்

கனவோடு துயில்கவிவக் கண்மூடி நானிருந்தேன் புனலோடி வளஞ்சேர்க்கும் பொன்னித் திருநாட்டில்

வருவிருந்து பார்த்திருக்கும் வாழ்வுடையார் சேர்ந்துறையும் திருவழுந்துார் எனப்புகலும் சிற்றுார் தனேயடைந்தேன்

கம்பன் இருக்குமிடம் காட்டிடுவீர் ! எனவினவ அம்பொன் மணிமாடம் ஆய்கின்ற கலைக்கூடம்

மிகவுடைய, பொருள்அள்ளி மேலோர்க்குத் தருகின்ற தகவுடைய, வள்ளன்மைத் தனவணிகர் நாடேகின்

காணலாம் எனப்புகன்ருர் கண்டவர்கள் ; வந்ததிங்கே வீன துவோ எனக்கலங்கி விரைந்தேன் மிகவிரைந்தேன்

நாட்டரசன் கோட்டை நகரடைந்தேன் கம்பன் கூட்டை மறைத்திருக்கும் கோவிலினே அங்குகண்டேன்

வணங்கிமுகம் மேல்கிமிர்த்தேன் வானக் குடுமிதொடும் மணங்கமழும் வெண்புகையின் மண்டலத்துள் ஒருருவம்

வந்துகின்று கின் விருப்பம் வாய்விட்டுக் கூறெனலும் கொந்திருக்கும் என்மனத்துள் நுழைந்ததுகாண் பெருமகிழ்வு

32