பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிப்போடு காத்து வளர்க்கின்ற வீரரவர் பழிப்பில்லாத் தொண்டுசெயும் பண்பார் கணேசன் எனும் நண்பரவர்; அங்கேயே நாடறிந்த மற்ருெருவர் நண்பருண்டு சுமந்திரன் போல் கல்லமைச்சர் என வளர்க்கும்

கருத்துடையார் நான் சொன்ன கவியுணர்வார் என்னுளத்தின் கருத்தறிவார் உரை எழுதிக் காக்கின் ருர் அன்னவர்தாம்

முருகப்பர் அருகிருப்பர் முத்தமிழின் சுவைசொல்லி உருகவைப்பர் இத்தகைய உத்தமரால் வளர்கின்றேன்

இன்னுமோர் உயிர் நண்பர் இங்குண்டு யாரென்று சொன்னவுடன் திகைக்காதே உண்மையினைச் சொல்கின்றேன்

கண்மூடி வழக்கத்தைக் கடும்புயலே போலெதிர்த்து மண்மூடச் செய்ய மனங்கொண்டார் திடங்கொண்டார்

கற்றறிந்த சொல்வல்லார் காஞ்சி புரத்துறைவார் நற்செயல்கள் பலசெய்வார் நாடறியும் அவர் என்றன்

உயிர்த்தோழர் என்றங்த உருவம் புகன் றதும்.நான் அயிர்த்தேன்பின் அண்ணுத் துரையா எனக்கேட்டேன் ஆமாம் அவரே தான் ; அவர் வளர்த்த கதைசொல்வேன்; ராமா எனச்சொல்வர் ராமன் பேர் தானறிவர் *

காவிய நலனறியார் கவிதையின் சுவையறியார் மேவிய கதையை எங்கும் மேலாகப் பேசிடுவர்

கதைகாலட் சேபம் என்று காணும் இடமெல்லாம் கதை கதைப்பர் பக்தி என்பர் கம்பன்யார் என அறியார்

எனை மறந்தார் எனே மறைத்தார் இராமனேயே வளர்த்தார்கள் கினேவிழந்தார் இவ்வண்ணம் கின் ட்ைடு மக்களெல்லாம் ;

36