பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயுறை வாழ்த்து

திருத்தக்கன் தருசிந்தா மணியில் இன் பத் தேனுண்டு சங்கத்து நூல் தி ளேத்துச் சிரித்துவரும் தமிழண்ணுல் ! நாச்சி யப்பத் திருவாளர் தருசிந்தா மணியை இல்லின் பொறுப்பேற்கும் காதலியாய்ப் பெறுதல் கண்டு பூரிப்புக் கொள்கின்றேன் ; உங்கள் வாழ்வு கருத்துவளர் காவியமும் புலவ னும்மாம்,

கவிநயமாம் பெறுமக்கள் என்ன வாழ்க Go

தான் சமைத்த சுவையுணவை இனிதென் அறுண்ணும் தலைவனைக் கண் டுளமகிழ்ந்தாள் தலைவி என்று நான்சுவைத்த குறுந்தொகைப்பாட் டுரைக்கும் அந்த நலமேபோல் சுவைவாழ்வு வாழ்க தோழி ! தேன் பழுத்த தமிழ்மொழிக்கே ஆக்கங் தேடும் தெளிவுரைகள் ஆய்வுரைகள் எழுத வல்லான் மேன்மக்கள் குழுவில் இவன் அறிஞன் என்ன மிளிர்வதுகின் கையில் தான் உணர்தல் வேண்டும் உ

T2