பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 வினையாயின், ஈறுகள் திரியாமல் ஒரோவழி இயல் பாதல் உண்டு.) இலக்கண விதி: ணகர, னகர ஈறுகள் வேற்று மைப்புணர்ச்சியிலே வருமொழி முதலில் வல்லி னம் வரின், ண்-ட் ஆகவும், ன்-ற் ஆகவும் திரி யும்; மெல்லினமும் இடையினமும் வந்து புணரின் இயல்பாகும். அல்வழிப் புணர்ச்சியிலே முவின மெய்கள் வரினும் இயல்பாகும். ண னவல் லினம்வரட் டறவும் பிறவரின் இயல்பு மாகும் வேற்றுமைக் கல்வழிக் கனத்துமெய் வரினு மியல்பா கும்மே. (ந-நூற்பா 209.) குறிலனவில்லா ணகர, னகர ஈறுகள் (அல்வழி) தூண்-நன்று=துாணன்று பசுமண் + நன்று= பசுமணன்று அரசன் - நல்லன்=அரசனல்லன் செம்பொன் -நன்று= செம்பொனன்று (வேற்றுமை) தூண்-நன்மை=துரணன்மை பசுமண் + நன்மை= பசுமணன்மை அரசன் + நன்மை=அரசனன்மை செம்பொன் + நன்மை செம்பொனன்மை இவ்வாறு, அல்வழியிலும், வேற்றுமையிலும் தனிக்குறிலைச் சாராத னகர, னகர ஈறுகளின்முன் வருகின்ற நகரம், முறையே னகரமாகவும், னகர மாகவும் திரியும்பொழுது,நிலைமொழி ணகர, னகர .ஈறுகள் கெட்டுப் புணரும்.