பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பேன், நிலைபெற்ற தலையில் திரிந்து மேயும். (மற்றலை = மன் + தலை) மீன், பின்னல் இருந்தவாறு நீந்தி வந்து இரையைக் குத்தும். (பின்னிச்சு = பின் + நீச்சு) பேன், தலையிலிருந்து வாரி எடுத்த பிறகு 'ஈச்சு, ஈச்சு என்னும் ஒலிக்குறிப்புடன் குத்தப் படும். (பின்னிச்சு = பின் + ஈச்சு) இப் பாடலில் உள்ள சொற்ருெடர்கள் இங் ாவனம் பிரிவுபட்டு கின்று, மீனுக்கும் பேனுக்கும் சிலேடைப் பொருளைத் தருகின்றன. எனவே, இப்பாடல் பிரிமொழிச் சிலேடை எனப்படும். 4. மடக்க ணரி முதலில் வந்த சொல்லோ, சொற்ருெடரோ, அடியோ மீண்டும் மீண்டும் வந்து வேறு பொருள் தருவது மடக்கணி எனப்படும். மடக்கு எனினும் யமகம் எனினும் பொருள் ஒன்றே. 'கொடியார் கொடியார் மதின் மூன்றும் கொன்ற படியார் பனைத்தடக்கை நால்வாய்க்-கடியார் உரியார் உரியார் எமையாள ஒதற் கரியார் கரியார் களம்' 'கொடியராயுள்ளவருடைய கொடிகள் பொருங் திய முப்புரத்தையும் எரித்த தன்மையினையுடை யார்; பனை போன்ற பெரிய துதிக்கையினை உடைய யானையின், அச்சத்தைத் தருகின்ற தோலை உடையார்; எம்மை ஆண்டுகோடற்குரி யார்; யாவராலும் புகழ்தற்கு அரியார்; கரிய