இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
46
கேளார் தமிழ்மொழி கேடுறச் சூழ்ந்திடுங்
கீழ்மதியை
வாளால் அரிந்ததன் வேரைக் களைந்துநம்
வண்டமிழைத்
தாளால்[1] வளர்த்தனை; தண்புனல் வார்த்தனை;
நின்குறிக்கோள்
சூளாக் குறித்தனை தொண்டுசெய் கின்றனை
தூமொழியே.
செல்வியுன் தாளிற் சிலம்பும் பரலும்
செவிகுளிர
நல்கிடும் அவ்விசை நாள் முழு தும்பெற
நாடுகின்றோம்;
மெல்விரல் நீவி மிழற்றிய யாழொலி
போலஇதழ்
சொல்லிய பாடலிற் சொக்கிநின் றேஉனைச்
சுற்றுதுமே.
நடைஎழில் காட்டுவை, நல்லறி வூட்டுவை,
நாண்மலரால்
தொடை எழில் காட்டுவை, தோகையுன் சாயலில்
தோய்ந்துணரார்
உடைஎழில் ஒன்றே உவந்தன ராகி
உணர்விலராய்க்
கடைவழி ஏகுவர் காரிகை உள்ளெழில்
காண்கிலரே.
- ↑ தாளால்-முயற்சியால்