பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47


புகழ்மலை உச்சியில் போற்றிட வாழ்ந்தவர்
          பூவுலகில்
இகழ்நிலை எய்தினர் எம்மவர் என்றுளம்
          ஏங்குகையில்
தகவுடன் மீண்டுந் தலைநிமிர்ந் தோங்கிடத்
          தாளெடுத்தே
அகவிடுந் தோகையென் றாடவந் தாயெங்கள்
          ஆரணங்கே.

முந்தையர் தந்தநன் னுால்மலர் மொய்த்ததன்
          தேனருந்திச்
சந்தனத் தென்மலைச் சாரலின் செந்தமிழ்
          தந்தநலம்
சிந்தையுள் தேக்கிநற் செல்வழிப் பண்தரும்
          தும்பியென
வந்திடுஞ் செந்தமிழ்ச் செல்விபல் லாண்டுகள்
          வாழியவே.

[தாய்மொழி காப்போம்]