வெள்ளி நிலா வினிலே - ஒரு
வெட்ட வெளி தனிலே
அள்ளி அனைத் தசுகம் - அதனால்
ஆவி சிலிர்த் ததடி
சிந்தா மணி தவழும் - மார்பில்
சேர்ந்து திளைத் தசுகம்
எந்த விதம் உரைப்பேன் - எழுதி
ஏட்டினில் காட் டுவதோ?
நற்றினை ஐங் குறுநூ-றகமும்
நல்ல குறுந் தொகையும்
உற்ற கலித் தொகையும் - தமிழே
ஊட்டி மகிழ வைத்தாய்
மேவித் தழு வவதற்கே - உன்மணி
மேகலை பற் றுகையில்
நீவிட் டகன் றுவிடின் - பிரிவு
நெஞ்சைத் துளைக் குமடி
வந்த வடக்குத் தெரு - மகள்பால்
வாஞ்சை என் றெண் ணினையோ
அந்தப் பொது மகளைத் - தொடவும்
ஆசையொன் றில் லையடி
வாழ்வு வளம் இழந்தாள் - வடக்கில்
வாடகை வீடு டையாள்
கழ்வினை ஒன் றுடையாள் - வலையில்
சொக்கிவிட் டேன் எனவோ
ஊடிப் புலந் துநின்றாய் என்றன்
உள்ளம் அறிந் திலையோ?
நாடித் திரி பவனோ - வஞ்சக
நங்கையின் கா தலுக்கே