பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

சாதி சமயங்கள் என்பவரை - நண்பிற்
சார்ந்து பழகுதல் தீமையடா
ஓதிய சங்கத்தில் உள்ளவரே - நம்மை
ஓம்பி வளர்த்திடும் நல்லவராம்

உன்னைச் சிறியவர் ஏசுகையில் - பெற்ற
உள்ளம் கொதிப்பதை யாரறிவார்?
முன்னைப் பெருமைகள் அத்தனையும் கொண்டு
முன்னேறிச் செல்லுதல் வேண்டுமடா

முற்றவும் உன்திறம் ஆய்ந்துணர்ந்தே - இன்பம்
மூழ்கித் திளைப்பவ ளாயிடினும்
பெற்ற பொழுதினும் நான்மகிழ்ந்தேன் - பிறர்
பேசிப் புகழ்ந்துனைப் போற்றுகையில்

வந்தவள் காதலில் சிக்கியதால் - தந்தை
வாழ்வில் மனங்கொளும் பான்மையின்றி
நொந்திடச் செய்தனர் ஆயினுமே - நன்னூல்
நூற்று வளர்த்திடு வேன்உனையே

நின்னைப் பெறுவதற் கென்னதவம்- செய்தேன்
நேரினில் உன்னடை கண்டவர்கள்
என்னைஓர் தக்கவள் என்றுரைத்தார் - புகழ்
ஏற்றிட வந்தனை வாழியவே

[காவியப்பாவை]