பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73


45. தமிழ் – என் தாய்

செந்தமிழ் என் பவளாம் - நல்ல
          செல்வக் குடி மகளாம்
முந்தை மொழி களிலே - அவளும்
          மூத்தவ ளாய்ப் பிறந்தாள்
முந்திய மூ வரசர் - அவையில்
          மொய்ம்புறத் தான் வளர்ந்தாள்
வந்தவர் யா வருக்கும் - செல்வம்
          வாரி வழங் கிடுவாள்.

தென்ற லுடன் பிறந்தாள் - நல்ல
          செய்கையொன் றே யறிவாள்
என்று பிறந் தவளோ? இவள்
          எத்தனை ஆண் டினளோ?
இன்றும் இள மையுடன் - அன்னை
          ஏற்றம் உறப் பொலிவாள்
ஒன்றிய நான்கு பெண்கள் - பெற்ற
          ஒண்டொடியா மவளே.

கன்னடத் தான் துளுவன் - மலையன்
          கண்டு மொழித் தெலுங்கன்
என்னுமிந் நால் வருக்கும் - அவரை
          ஈந்து மணம் முடித்தாள்

பெண்ணெடுத் தே மகிழ்ந்தோர் - என்னைப்
          பெற்றவ ளைப் பகைத்தார்
நன்னடைப் போக் கிழந்தார் - அந்த
          நால்வரும் நன் றிகொன்றார்.