பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80


48. சொற்றமிழ் பாடுக!

...................................................................
‘அகத்தும் பிறமொழி வெறுத்திடல் அறிகிலம்
பகுத்தறிவு வுடையோம் பண்பும் உடையோம்
வேண்டும் மொழிகளை வேண்டுவோர் பயின்றிங்
கீண்டி யுறையுநர்
[1] எண்ணிலர்[2] அறிக!
குறுமன மென்றும் விரிமன மென்றும்
சிறுமன முடையோர் செப்புவ[3] கொள்ளேல்!
தனியொரு மாந்தன்[4] தன்னலம் பேணின்
முனியத்[5] தகுமது குறுமன மாகும்:
தன்னல மறுப்பது விரிமன மாகும்,
முன்னவர் பேணிய மொழியும் நாடும்
மன்பதை முழுமைக் குரியன வன்றோ !
அன்புளங் கொண்டோர் அவற்றைப் பேணின்
தென்படும் குறைஎன்? தெளியா மாந்தர்
குறுகிய மனமெனக் குளறுவர் நம்பேல்!
பெறுபுகழ்த் தாய்மொழி பேணாஅ ரா[6]கி
வருமொழி வாழ்த்தி வரவுரை கூறுநர்
அறமன முடையரென் றறிவுளோர் பகரர்;


  1. உறையுநர் - வாழ்பவர்
  2. எண்ணிலர்-கணக்கிலாதவர்
  3. செப்புவ - சொல்பவை
  4. மாந்தன் - மனிதன்
  5. முனிய - வெறுக்க
  6. பேணார் -பேணாதவர்.