பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 இடையூறாக அந்தப் பக்கமே வரமாட்டார். என் எழுத்துப் பணிக்கு எவ்வகைத் தொல்லையும் தந்ததே இல்லை. மக்கட்பேறு : குழந்தைகளென்றால் அளவுக்கு மீறி அன்பு காட்டுவேன். குழந்தைகளைக் கொஞ்சும் பொழுது, நல்ல கவிதையைச்சுவைப்பது போன்ற உணர்வும் இன்பமும் பெறுவேன். அவ்வின்பத்தைப் பல கவிதைகளாக வடித்திருக்கிறேன். எனக்கு முதன் மகள் குமுதம், அடுத்தவன் பாரி. மூன்றாமவன் சுப்பிரமணியன் பின்னர் அன்னம், குமணன், செல்வம், அல்லி என நால்வர் பிறந்தனர். சுப்பிரமணியன் பெயர்க்காரணம் பின்னர்க் கூறுவேன். அவன், ஐந்து அகவை முடியுமுன் முடிந்து விட்டான்.