பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கவியரசர் முடியரசன் படைப்புகள்-1 என்னையும் அழைத்திருந்தனர். இலக்கணப்புலவர்.மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை தலைமையி கூட்டம் நிகழ்ந்தது. தில்லியிலிருந்த நம் தமிழ்ப் பேராசிரியர்கள். சில மாற்றங்கள் கொடுத்திருந்தனர். சிலவற்றை மாற்றிக் கொடுத்தேன். சிலவற்றை மாற்ற இயலாதென்று கூறிவிட்டேன். தமிழ் நாட்டு கவிஞர்கள் மட்டும் இந்நூலில் இடம் பெற்றுள்ளனர். வடநாட்டு கவிஞர் இடம் பெறவில்லை என்ற குறிப்பொன்றிருந்தது. என்ன ஐயா! வேடிக்கையாக இருக்கிறது? அந்தந்த மாநில -- களில் அந்த அந்த மொழிக் கவிஞர்களைப் பற்றியெழுதுவது ஒ குறையா? என்றேன். வடநாட்டில் நம் ஒளவையைப் பற்றி எவனாவது எழுதச் சொல்லியிருக்கிறானா? நம்ம மடையன்தா - இப்படியெல்லாம் சொல்லுவான்' என்று வருத்திக் கூறினா வேணுகோபாலப்பிள்ள்ை. கைநடுங்க நாநடுங்கப் பேசிய அவ் பெரிய முதியவர். இக்கடுமையான சொல்லைப் பயன் படுத்தின - என்றால் அவர் மனம் எவ்வளவு புண்பட்டிருக்க வேண்டும்! தமிழன் அடிமையாகவே இருந்து, பழகி இன்பங் கண்டவன். ஆனால் இன்னும் அடிமையாகவே இருக்க விழைகிறான். சொன்னால் விரிந்த மனப்பான்மை என்பான். தமிழ் மாநிலத்தானுக்கு மட்டுந்தான் விரிந்த மனப்பான்மை வேண்டுமோ? ஏனைய மாநிலத்தானுக்கு மட்டும் சுருங்கிய மனப்பான்மை இருக்கலாமோ? எது விரிந்த மனம்? சுருங்கிய மனம்? என வேறு பாடறியாதவன் தமிழன்! o எட்டாந்தேதி கூட்டத்திற்குச் செல்லவேண்டும்; ஆனால், நான் கலைஞர் இல்லத்திற்குச் சென்றுவிட்டேன். நுழைந்ததும் திகைத்துப் போனேன். எந்நேரமும் நெருக்கடியாகவே அவ்வில்லம் பொலியும் நான் சென்றபொழுது அம்மனையில் ஒருவரைக் கூடக் காணவில்லை. பொலிவிழந்து நிற்கக் கண்டேன். நெருக்கடி (எமர்ஜென்சி) அரசு இருந்தமையால் இங்கே நெருக்கடி இல்லை. ■ - | அப்பொழுது கலைஞர் மாடியிலிருந்து இறங்கி வந்தார். என்று போல் மலர்ச்சியாகத்த ான் இருந்தார். வணக்கம் என்றேன். வணக்கம் வாருங்கள் எப்பொழுது வந்தீர்கள்?' என்றார் கலைஞர். இரண்டு ந ஆகிறது என்றேன். 'வண்டியில் ஏறுங்கள் பேசிக் கொண்ே