பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 139 கவியரசு முடியரசனார் பாராட்டு விழா பேரன்புடையீர், வணக்கம். நிகழும் 7.10.79 ஆம் நாள் ஞாயிறு காலை 9.30மணியளவில் காரைக்குடி மீ. சு. உயர்நிலைப் பள்ளியில், கவியரசு முடியர சனார் அவர்களின் தமிழ்த் தொண்டையும், ஆசிரியப் பணியையும் பாராட்டிப் பொற்கிழி வழங்கும் விழா நடைபெறும். விழாவில் சான்றோர்களும் அறிஞர் பெருமக்களும் கவிஞரைப் பாராட்டிச் சிறப்பிக்க இருக்கிறார்கள். அன்பர்கள் விழாவில் கலந்து கொண்டு, தமிழின்பம் நுகர்ந்து, பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இங்ங்னம் பழைய மாணவர்கள் மீ. சு. உயர்நிலைப்பள்ளி காரைக்குடி. நிகழ்ச்சி நிரல் தமிழ் வாழ்த்து வரவேற்புரை: புலவர் திரு. பழ. பழநியப்பன் அவர்கள், தலைவர் முன்னுரை: தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், பொன்னாடை அணிவித்துப் பொற்கிழி வழங்குதல் : திரு.நா. மெய்யப்பன் அவர்கள், ஆடிட்டர், காரைக்குடி. பாராட்டுரை: புலவர் திரு. படிக்கராமு அவர்கள், கோயிற்பட்டி புலவர் திரு.சா. மருதவாணன் அவர்கள், கோவை