பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 7 来 21ஆம் அகவையில் இயற்றிய 'சாதி என்பது நமக்கு ஏனோ? என்ற கவிதையே முதல் முதலில் அச்சு வாகனம் ஏறியது. இது பேரறிஞர் அண்ணாவால் திராவிட நாடு’ இதழில் வெளியிடப்பட்டது (1940). தந்தை பெரியாரின் தன்மான இயக்கத் தொடர்பு (1940). தன்மான இயக்கத் தொடர்பால் 'வித்துவான் தேர்வில் தோல்வியுறுமாறு செய்யப் பட்டார் (1943). நவாபு டி.எஸ். இராசமணிக்கம் நாடகக் குழுவில் பாடல், உரையாடல் எழுதும் பணி, அங்கிருந்த சிறை வாழ்க்கை' யும், மதவழிபாட்டு முறைகளும் பிடிக்காமல் வெளியேறினார். (1944). பெரியார், தலைமையில், அண்ணா முன்னிலையில் நடைபெற்ற காரைக்குடி திராவிடர் கழக மாநாட்டில், மகாநாட்டுத் தீர்மானம் இவர் முன் மொழிய அன்பழகன் வழி மொழிதல், மாநாட்டில் பேரறிஞர் அண்ணாவுடன் முதல் நேரடிச் சந்திப்பு (1945). புதுவை மாநிலத்திற்கு அருகில் உள்ள மயிலத்தில் தலை மறைவாக இருந்து படித்து வித்துவான் பட்டம் பெற்றார் (1947). சென்னையில் தமிழாசிரியர் பணி - பல்வேறு இதழ்களில் இலக்கியப் பணி - பொன்னி’ இதழில் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் - திராவிட இயக்கத் தலைவர்கள், தமிழறிஞர்களுடன் தொடர்பு (1947-49). தான் கொண்ட கொள்கைக்காகக் கைம்பெண் - சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளத் தாயாரிடம் வேண்டுதல். ஒரே மகன் என்பதால், இசைவு தரத் தாயார் மறுத்தல் (1948). 'சாதி மறுப்புத் திருமணம் செய்யவாவது இசைவு கொடுங்கள் என அன்னையாரிடம் வேண்டுதல். பெற்றோர் இசைதல். பெற்றோர் மூலம் கலைச்செல்வி' எனும் நலத்தகையாரை பேராசிரியர் மயிலை சிவமுத்து தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளல் (1949)