பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 1 இடர்ப்பாடுகளும், இன்னல்களும் வந்தபோதும் கொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை வழுவாமல் தடம்புரளாத் தங்க மாக, தன்மானச் சிங்கமாக தமிழ் வேழமாக கொள்கைக் குன்றமாக வாழ்ந்தவர், பணம், பதவி, பட்டம், பகட்டுக்குப் பணியாமலும், அரசவைப் பதவிகள் நாடி வந்தபோதும் அவைகளைப் புறக்கணித்தும் வளையா முடியரசர் என்றும் வணங்கா முடியரசர்' என்றும் புகழ்பெற்றவர், தன்மானக் கொள்கையால், மைய மாநில அரசின் அரிய பல விருதுகளை இழந்தவர். பல்லாயிரம் இளைஞர்களைத் தமிழ் வீறும் வேட்கையும் பெறச் செய்தவர். கனவிலும் கவிதை பாடுபவர். பாட்டுலகில் பாரதியாரைப் பாட்டனாகவும், பாரதிதா சனைத் தந்தையாகவும் கருதிக் "குலமுறை கிளத்தும்” கொள்கை யுடையவர். தமது வாழ்நாளில் இறுதியாக அவர் இயற்றிய கவிதை. வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக் கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ் நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழே ஆளாதல் திண்ணம் அடியேன் நினது மலரடிக்கே. புகழ் மாலை “கவிஞன் யார்?. என்பதற்கு எடுத்துக்காட்டுத்தானய்யா, பகுத்தறிவுக் கவிஞர் முடியரசனய்யா' - தந்தை பெரியார். “திராவிட நாட்டின் வானம்பாடி கவிஞர் முடியரசன்” - பேரறிஞர் அண்ணா. “தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிக்கின்ற மான் துள்ளும் வேகத்தைக் கவிதையினால் வான்பெய்யும் கோடை மழைபோலப் பொழிகின்ற முடியரசர் முன்னாள் தொட்டு இந்நாள்வரை இருக்கின்ற நம்கவியரசர்” “தன்மானக்குன்றம் - கொள்கை மாறாச்சிங்கம் - திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கவிஞர் - திராவிட இயக்கத்தின் ஈடு இணையற்ற தளகர்த்தர்களில் ஒருவர் - 1940க்குப் பின்னால் திராவிட இயக்கத்தின் சார்பில் நாற்பதுக்கு மேற்பட்ட இதழ்களில்