பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.06 கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 உடன்பிறப் புணர்ச்சி ஒவ்வொ ருளத்தும் இடம்பெறின் அழிபோர்எழுதல் உண்டோ? மக்கட் பற்றும் மக்கட் பண்பும் மிக்க மனத்தில் மேவும்நல் லமைதி: இணையன கூறி முனைகுவை யாகின் கனவினும் அரும்பாது கடும்போ ருணர்வு: போரழி வொழிந்த, புன்மைகள் அழிந்த ஒருல கிங்கே தோன்றுத லுறுதி: பாண்டியன் போர்மறுப் புரைப்பின் யார்மறுப் புரைப்பர்? ஊர்புரப் போர்க்கெலாம் உய்க்குதும் ஒலை: நலந்தரும் அனைத்தும் நயம்பட வுரைத்துக் கலந்துரை யாடிக் காண்குறுந் தீர்வு: அழிவெலாந் தொலைக அமைதி நிலவுக ஒழிக போரே ஒழிக போரே.