பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

முதுமைக் காலத் தொல்லை, பூச்சிகளினால் ஏற்படும்


வயது பொருத்தமே தேவையில்லாதபடி வலிகள் தோன்றி வாட்டிடும்.

கஷ்டப்பட்டு வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு அதாவது பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர், போன்ற வாகன ஒட்டுநர்களுக்கும். கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போன்ற மற்ற பிற விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்ட ஆட்டக்காரர்களுக்கும், அலுவலகங்களில் பல மணிநேரம் வேலை செய்வோருக்கும் இந்த மூட்டு வலி என்ற நோய் வரும்.

இந்த மூட்டு வலியைத்தான் முடநீக்கி இயல் எனப்படும். எலும்பு மூட்டு சிகிச்சைத் துறையில் ஏற்பட்டுள்ள தற்கால முன்னேற்றங்கள் காரணமாக, நடக்க முடியாமல் முடங்கிக் கிடக்க வேண்டிய சூழ் நிலையை உருவாக்கிவிடும். இந்த மூட்டு வலிக்காரர்களுக்கு மறுவாழ்வு தரும் பணி அரசு மருத்துவமனைகளில் உள்ளது.

கிராமங்களில் வாழும் மனிதன் ஆனாலும் சரி, நகரங்களில் வாழும் மனிதனானாலும் சரி. அவனது ஆயுள் பூராவிலும் நடக்க முடியாத இப்படிப்பட்ட நோயை அனுபவிப்பது மட்டுமல்ல; இவனைப் போல ஆயிரக்கணக்கான முடமாகிப்போன வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்கின்றோம்.

வயது முதிர்ந்தோராக ஆக, உடம்பிலுள்ள மூட்டுகளில், தேய்மானம் ஏற்படுவது இயற்கை குறிப்பாகக் காலில் உள்ள மூட்டுக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. முட்டிக்காலில், கனுக்கால்களில் கை மடிப்புகளில், தோள் மூட்டுக்களில் தேய்மானம் பெருமளவு நிகழத்தான் செய்யும்.