பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொல்லை. நீங்கி நலமுடன் வாழலாம்

39


இப்படிப்பட்டோர் மூட்டு வலிகளால் அவதிப் படுவதற்குரிய ஆதாரங்களும் உண்டு. அதற்கான ஆய்வுகளும் உறுதிப் படுத்துகின்றன.

மேலும், போதிய உடல் பலமும், வலிமையும் இல்லாமல், உணர்ச்சியால் தள்ளப்பட்டு, பெண்கள் உடல் உறவில் அதிகமாக ஈடுபடுவோருக்கும் இந்த மூட்டுவலி வரும்.

இந்த மூட்டு வலி நோயை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து கவனித்து, டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்றாக வேண்டும்.

இந்த நோயை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், அலட்சியமாக இருந்து விட்டால், நாளடைவில் எலும்புகள் உராய்ந்து உராய்ந்து தேய்ந்த மூட்டு எலும்புகள், பிறகு எப்போதுமே குணப்படுத்த முடியாத அள்வுக்கு மூட்டுகள் பழுதடைந்து விடும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டு செயலிழந்த மூட்டு எலும்புகளைச் சுற்றியும், இவற்றைக் கடந்து செல்லும் நரம்பு மண்ட்லங்களும், தசை நார்களும் படிப்படியாகச் சீர்கெட்டு முடிவில் பயங்கரமான விளைவுகளை உண்டாக்கும். அதனால் மனிதனுடைய உயிருக்கே கூட ஆபத்துக்களை உருவாக்கும் நிலைகள் ஏற்படும்.

மூட்டுகளில் சேரும் எலும்புகளின் முனைகள் மென்மையான இளம் எலும்புகளால் மூடப்பட்டிருக்கும் குருத்து எலும்புகள் தேய்ந்துபோய் அடியிலுள்ள எலும்புகள் மிகவும் பழுதடைந்து. அவைகளும் தேய்ந்து தேய்ந்து உடம்புக்கு வலியைக் கொடுக்கும் தன்மை உருவாகும். அதனால் தேய்ந்து போன எலும்புகளைச் சரிசெய்யபோதிய மருந்து வகைகள் இல்லாமையால், தேய்ந்து போன எலும்புகளை உடலை விட்டே நீக்கியாக வேண்டிய அபாய நிலை ஏற்பட்டுவிடும் என்பது உறுதி.