பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்

43


எலும்புகளுக்குள்ளே பசை நிறைந்த திரவத்தைச் சுரக்கும் சுரப்பிகளிலே சென்று, இரத்த ஓட்டத்தைச் சரிசெய்து தேவையான பசை நிறைந்த திரவத்தை உருவாக்கி, மூட்டுகளிலே ஏற்படும் எலும்பு உராய்வுகளைத் தடுத்து நிறுத்தும் நிலை ஏற்படுமே ஒழிய, தைலங்களைத் தடவிக் கொண்டே வாழ்ந்தால், அந்தச் சிகிச்சை அந்தந்த வலி எடுக்கும் சமயத்துக்கு ஏற்றபடி தான் ஆறுதலாகவே அமையும்.

அதே போலத்தான். கழுத்து வலி பாதிப்புக்கும் நாம் உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டும் என்கிறோம்.

அதை விடுத்து, கழுத்து வலிக்கு பட்டை அணிவதும், மூட்டு வலியால் பாதிக்கப்பட்டோர் முதுகுக்குப்பட்டை அணிவதும் அந்தந்த நேர வலிகளுக்காகப் போடப்படும் தற்காலிக வலி நீக்கிகளாக இருக்குமே தவிர, நிரந்தர வலி போக்கியாக அமையாது என்பதை வலிகளால் அவதிப்படுவோர் உணர வேண்டிய ஒன்றாகும்.

கழுத்து வலிக்காக நாம் டாக்டரிடம் சென்றால், கழுத்து வலிப் பகுதியிலே ஏழு எலும்புகளால் ஏற்பட்ட இறுக்கத்தை அதாவது அழுத்தத்தைக் குறைக்க ஒரு சிவப்பு வண்ண ஒளியையுடைய கதிர் வீச்சுகளை கழுத்துப் பகுதிக்கு உள்ளே போகுமாறு, கழுத்து மேல் பகுதியிலே கொடுப்பார்கள்.

இந்தச்சிவப்புக்கதிர் ஒளிகள், கழுத்து மேல்பகுதியிலே காட்டி அந்த ஒளிக் கதிர்கள் கழுத்துப் பகுதிக்குள் ஊடுருவும் போது, கழுத்தில் ஏற்பட்ட வலி படிப்படியாகக் குறைய ஆரம்பித்து, நமது கை, கால்களை நன்றாக அசைத்துப் பளுவான சாமான்களையும் தூக்கமுடிகின்ற அளவுக்கு வலி நீங்கும். இந்த சிவப்பு நிற ஒளிக்கதிர் வீச்சு நல்லதொரு சிகிச்சையாகும்.