பால குமரன் பரிவுடன் அன்னையைப்
பணிந்திடச் சென்றனனே!
நீல விழியினில் நீர்வடித் தன்னை
நின்றிடக் கண்டனனே!
2
“அன்னாய்! அன்னாய்! அழுகையின் காரணம்
அறைகுவை, ”என்றனனே;
“பொன்னே, கண்ணே புகலுவன்,” என்றே
பூவை நவின்றனளே:
3
“டில்லியின் மன்னவன் தெய்வக் குதிரையைத்
தேடிப் பெற்றனனாம்;
வல்லவர் வந்ததை வகைபெற ஒட்டிடப்
பந்தயம் வைத்தனனாம்;
4
நல்லது குதிரையை நான் அடக் குவனென
நாடினர் உன்தந்தை ;
சொல்லிட மனமிலை சூழ்ந்தனர் சிறை”, யெனச்
சோர்ந்தனள் நல்லன்னை.
5
“ஆஹா” என்றே அலறி எழுந்தான்
அஞ்சா ஜயசிங்கன்;
“வேகக் குதிரையை வெல்வேன்,” என்றான்
வீரன் ஜயசிங்கன்.
6
“அந்தோ குழந்தாய்! ஆகா துன்னால்”
என்றாள் அன்னேயுமே.
“தந்தை இகழ்வைத் தநயன் தீர்ப்பேன்
தாயே மன்னியுமே”
7
என்றே இளைஞன் அன்பால் இயம்பி
இனிதே வணங்கினனே;
அன்றே அவளும் ஆசிகள் கூறி
அனுப்பிட இணங்கினளே.
8
56