பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[101 j ஊர்வாயை மூட முடியுமா ? கிள்ளின் மயக்கினேவிடக் காதல் மயக்கம் உறைப்பானது. காதல்வெறி கொண்டவர்களின் மனப்பாங்கை எளிதில் அறிந்து கொள்ளமுடியாது. காதல் வெறியோ மிகவும் பொல்லாதது; காதல் காரணமாகப் பிறர் பழிதூற்றும்பொழுது (அலர் தூற்றும்பொழுது அதில் சம்பந்தப்பட்டவர்கட்கு மனநிறைவே ஏற்படுகின்றது. சாதாரணமாக ஒருவருக்குக் கிட்டாத பெருமை தமக்குக் கிட்டி விட்டதாகத் தமக்குள் ஒருவித மகிழ்ச்சி அலை பொங்கி எழுவது தான் இதற்குக் காரணம் என்று கருதலாம். பட்டம் இல்லாதவர் கட்கு உயர்ந்த பட்டங்களைப் போட்ட முகவரியுடன் கடிதங்கள் வருங்கால் ஒருவித மகிழ்ச்சி உண்டாவதில்லையா? அதுபோன்ற ஒருவித மகிழ்ச்சி இவர்கட்கும் உண்டாகின்றது. அதுவும் பெரிய இடத்துத் தொடர்புடன் அலர் எழுந்துவிட்டால் அதில் சம்பந்தப் பட்ட சாதாரண நிலையிலுள்ளவர்க்கு ஏற்படும் மகிழ்ச்சியே ஒரு தனி நிலை. 翼 演 X உலா வருங்கால் சேரனேக் காணும் குழல்மொழி கங்கை யொருத்தி காதல் கொள்ளுகின்ருள். அதனுள் அவளது மன அமைதி குலேந்து விடுகின்றது. உண்னும் உணவும் அவளுக்கு மருந்தாகிவிடுகின்றது . உறக்க மும் சரியாக வருவதில்லை. அவனையே கினைந்து கினைந்து உருகி நெகிழ்கின்ருள் ; வளையல்களும் தாமாகக் கழன்ருெழிகின்றன. இவற்றையெல்லாம் கண்ட அலர் வாய்ப் பெண்டிர் பலர் பழி மொழியத் தொடங்குகின்றனர். அவளைப்பற்றிய அம்பலும் அலருமாக ஊரெல்லாம் பரவி விடு கின்றது. அந்த நங்கையின் அன்னையும் இதனை அறிகின்ருள். தன் மகளை இற்செறிக்கின்ருள். -