இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22
ஏதமெய் தாமல் அருள்வா
- னெனுமுண்மை எய்துவிக்கும்
பூதலம் போற்றும் மருதா
- சலத்துறை புண்ணியனே. (51)
புண்ணியம் கண்ணிய கண்ணியர்
- கொங்கிற் பொலிமருதத்
திண்ணிய குன்றினில் அண்ணிய
- தேனைத் தெளிந்தருந்தி
மண்ணிய நன்மணி என்ன
- இருந்தார் மதியிலிசொல்
தண்ணிய னல்லேன் மயலுழந்
- தேனென் தலையெழுத்தே. (52)
எழுத்திற் கதுவாத நான்மறைக்
- குட்பொருள் என்தலையின்
எழுத்தைக் குறைத்துப் பவகோயை
- மாற்றும் எளியபொருள்
எழுத்திற் பதத்திற் பொருளிற்
- சிறக்கும் இனியதமிழ்
எழுத்திற் பொலிபொருள் மாமரு
- தக்குன் றிருந்ததுவே. (53)
51. போதனை-மலரிலுள்ள பிரமனை. ஏதம்-துன்பம்.
52. கண்ணியர்-மதிப்புடையோர். மண்ணிய சாணையிட்ட சொல் தண்ணியன் அல்லேன்-குளிர்ந்த சொல்லே உடையவனல்லாத யான், -
53. கதுவாத - அகப்படாத, பவ நோயை - பிறவியாகிய பிணியை. பதத்தில் சொல்லில். தமிழ் எழுத்தில்-தமிழில் எழுதிய நூல்களில்.