பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/930

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - செங்கோடு திருப்புகழ் உரை 457 சூரனைச் சங்கரித்தவனே! தேவலோகத்துக்கு வேண்டிய வனே ஆறு (கிருத்திகை) மாதர்களின் குழந்தையே! குமரனே! வேளே! கடப்ப மலர் நிறைந்த மாலை அணிந்துள்ள தோளனே! வீரனே! பரமருக்கு (சிவனுக்குக்) குருவே! அழகனே! தேவ மகள் (தெய்வயானையின்) பங்கனே (கணவனே)! என்றெல்லாம் வேதங்களையும் ஆகமங்களையும் ஆய்ந்த (தேவர்களின் ) சுருதி (முறையீட்டு) ஒலி தோதகம் (சூரன்ரிடம் தாங்கள் படும்) வருத்தத்தைப் பாட (எடுத்துக் கூற) அல்லது வேதாகம ஒலி யெல்லாம் உனது சாமர்த்தியத்தை எடுத்துப் பாட), மன்ல ஏழு (ஏழுகிரிகளும்) துண்டாகப் பொடிபட அம்மலைகளில் எழுந்திருந்த அசுரர்களின் இரத்தம் பெருகி ஆறாக வர வேலாயுதத்தைச் செ லுத்தி நடனம் கொண்ட வேலனே! மாலியவான் இறக்கவும், ஒப்பற்ற இரணியன் சாகவும், (வலி மிக்க) வாலியும் பருத்த மராமரமும் அழியவும், கும்ப கர்ணனும், கடலும், பயங்கரமான வலிமை கொண்டிருந்த இராவணனும் அழியவும் செலுத்தின ஆசுகன் (அம்பினைக் கொண்டவ்ன்), அழகிய மேக நீன் மன மகிழ்ச்சியுடன் இடையர் மாதர்களுடன் கூடி விளையாடி (காம லிலைகளை) அனுபவித்தவன், இலக்குமியை மார்பிற் கொண்டவன், பொன் முடியோன், ஆகிய திருமாலின் மகளான அறிவு நிறைந்த ஆனை (தேவசேனை) யின் (அல்லது மான் போன்ற வள்ளியின்) (முன் பக்கத் தொடர்ச்சி) கொல்லப்பட்டவன், மாலி - இராவணன் சேனா வீரன், இலக்குமணரால் இறந்தவன் (அபிதான சிந்தாமணி) "ஆடகன் - இரணியன் - பாடல் 321 - 1 பார்க்க tt பாழி - பருத்த வலிய

  1. மரம். மராமரம் - பாட்டு 231 பார்க்க.

ss கும்பாகனன் - கும்பகர்ணன் இராவணன் தம்பி. ro $5–ు மீது பாணம் விட்டது; பாடல் 177 பார்க்க முகாண முடியோன் பொன் முடியோனாகிய விட்டுணு,