பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|()() முருகவேள் திருமுறை ||به ا {\муч»р 104. தன் அறுபவம் கூறினது Glarnica ழடுத்த சினவடி வேறும் விருமுகமும் பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க் கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடைக் குமரனென எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந் தெதிர்நிற்பனே. (அந்) பதும மலர் ...... நினைப்பினும் அங்கே, செங்கேழ் ... தோளும் (விளங்க) என் முன்வந்தெதிர்நிற்பனே. (பொ - உ) (பதுமமலர்க் கொங்கே - தரளம்) தாமரை மலர்களின் மணத்தை (தாளம்) முத்துக்கள் சொரிகின்ற திருச்செங்கோட்டு. மலைக் - குமரன் என்று நான் எவ்விடத்தில் நினைத்தாலும் அவ்விடத்தில், செங்கேழ் - சிவந்த நிறம் (அடுத்த கொண்டதும், சினவடி வேலும் - கோபமும் கூர்மையும் கொண்டதுமான வேலாயுதமும், அழகிய முகங்களும், (பங்கே நிரைத்த) பக்கங்களில் வரிசையில் அமைந்த (நற் பன்னிரு தோளும்) சிறந்த பன்னிரண்டு தோள்களும் (விளங்க) அவர் என் முன் வந்து எதிர் நின்று அருள் புரிவார். (சு - உ) அடியேன் திருச் செங்கோட்டு முருகன் என எங்கே நினைத்தாலும் அவர் என் முன்வந்து நின்றருளுவார். (கு உ)வேலும் முகமும் தோளும் எதிர்நிற்குமே என்னாது எதிர் நிற்பனே என முடிவதால் - அவை விளங்க முரு முருகன் எதிர்நிற்பன் என முடித்தல் வேண்டும். முத்துபிறக்கும் இடங்களில் தாமரையும்' ஒன்று தாமரையினின்றும் தரளம் (முத்துக்கள்) அந்த மலரின் மணத்தை வீசின. முத்து பிறக்கும் 20 இடங்களைத் திருப்புகழ் 306 பக்கம் 260, 764 - பக்கம் 273 பார்க்க தாமரையின், கொங்கு - மணத்தையும் தரளத்தையும் சொரியும் செங்கோட்டு மலை எனக்கொண்டு, தாமரையின் நறுமணத்தையும், மலையிடத்தே இருந்த மூங்கில், வாழை, மேகம், தாமரை, யானை, பாம்பு இவைகள் ஈன்ற முத்தையுங்கொண்ட திருச்செங்கோட்டு மலை, எனவும் பொருள் காணலாம்.கொங்கே-ஏ-அசை