பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 101 105. பிரார்த்தனை-வினை அற ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் னருட்பதங்கள் சேவிக்க என்று நினைக்கின்றி லேன்வினை தீர்த்தருளாய் வாவித் தடவயல் சூழுந் திருத்தணி மாமலைவாழ் சேவற் கொடி யுடை யானே யமர சிகாமணியே. (அந்) வாவித் ........ சிகாமணியே ........ ஆ.விக்கு தீர்த்தருளாய். (பொ-உ)வாவி-நீர்த் தடங்களும், தடவயல்-பெரிய வயல்களும் குழும் திருத் ம்ாம்லையில் வாழ்கின்ற சேவற் கொடிப் பெருமானே! தேவர் சிகாமணியே! (ஆ.விக்கு) என் - உயிர்க்கு (மோசம்) பத்து ஏற்படும் ன்மையை நான் அறிந்து, உன்னுடைய ಘೀ ருவடிகளைச் சேவிக்க (நான்) (என்றும்) ஒரு நாளும் நினைக்கின்றேன் இல்லையே எனது வினைகளைத் தீர்த்து அருளுவாயாக (சு-உ)தணிகேசா என் உயிர்க்கு வரும் ஆபத்தை உணர்ந்து நான் (கு உ) திருத்தணிகையில் ஐந்து நாள் ந்து திருத்தணிகேசரை வழிபட்டால்பந்த வினை தொல்ையும்-முத்தி வீடு கிட்டும். "அஞ்சு வைகல்இவ் வகன்கிரி நண்ணி யெம் அடிகள் தஞ்ச மென்றுளந் துன்னியே வழிபடுந் தவத்தோர் நெஞ்ச கந்தளில் வெஃகிய போகங்கள் நிரப்பி எஞ்ச லில்லதோர் வீடுபே றடைந்தினி திருப்பார்" - கந்த புரா - 6-24-225. "ஐந்து நாளசைந் தெந்த மிணையடி வந்து வணங்கினோர் பந்தம் பாற்றுவார்" - தணிகைப் புரா - விடையருள்-39, "அந்தவரை அடித்தலத்தி லேனும் அற் முகவரா லயத்தி லேனும் சிந்தை ஒரு மித்தவராய் ஒருமுகுர்த்தம் தலவாசஞ் செய்த பேர்கள் முந்தியசென் மங்கள்தொறும் புரிந்திடுமா பாதகங்கள் முழுதும் நீங்கிச் சந்ததமும் அழியாத கந்தசா யுச்சியத்தைச் சார்கு வாரே" = տոհորտո புராணம் - 7.16.